search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பஸ்கள்"

    • தமிழகத்தில் தொடா் விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு 350 பஸ்கள் இயக்கம்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் தொடா் விடுமுறை நாட்களான நாளை (சனிக்கிழமை), ஞாயிற்றுக்கிழமை (15-ந் தேதி) மற்றும் மீலாது நபி (16-ந் தேதி) ஆகிய தினங்களை முன்னிட்டு, கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக 955 பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய ஊா்களுக்கு கூடுதலாக 190 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு 350 பஸ்கள் என மொத்தம் 1,515 கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தமிழகத்தில் இருந்து அதிக அளவில் சிறப்பு பஸ்களை இயக்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.
    • நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ந்தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு பிரமோற்சவ விழாவையொட்டி அக்டோபர் 1-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது. 4-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவ விழா தொடங்குகிறது.

    8-ந் தேதி தங்க கருட சேவையும் 12-ந் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வது வழக்கம்.

    இதனால் தமிழகத்தில் இருந்து அதிக அளவில் சிறப்பு பஸ்களை இயக்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று தமிழக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகளை ஆந்திர மாநில அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் தமிழகத்தில் சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 150 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பிலும் எவ்வளவு பஸ்கள் இயக்கலாம் என அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 67,668 பேர் தரிசனம் செய்தனர். 23,157 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

    ரூ.3.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    • வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.

    நெல்லை:

    புரட்டாசி மாதம் பிறப்பதையொட்டி நெல்லையில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு சென்று வர போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    அதன்படி நவ திருப்பதி கோவில்களான ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி(2), பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகிறது.

    அந்த வகையில் புரட்டாசி மாத சனிக்கிழமைகளான வருகிற 21, 28-ந் தேதி அடுத்தமாதம் 5, 12-ந் தேதி ஆகிய 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டலம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது.

    இந்த சிறப்பு பஸ்களானது புரட்டாசி மாத சனிக்கிழமை காலை 7 மணிக்கு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு நவ திருப்பதிகளுக்கு சென்று பின்னர் இரவில் மீண்டும் புதிய பஸ் நிலையம் வந்து சேரும்.

    இதற்காக ஒரு நபருக்கு கட்டணம் ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்புதிவு செய்ய விரும்புவோர் நெல்லை புதிய பஸ் நிலையம், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டண தொகையை முழுமையாக செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    அல்லது அரசு போக்கு வரத்து கழக இணையதளம் www.tnstc.in மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    இத்தகவலை அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல மேலாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

    • தமிழகம் முழுவதும் 2,315 சிறப்பு பஸ்கள் இயக்கம்.
    • தொடர் விடுமுறையால் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு.

    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி, வார விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2,315 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்து உள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சுபமுகூர்த்தம், 7-ந்தேதி (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி, 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாள் என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் 5, 6 மற்றும் 7-ந் தேதிகளில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 5, 6 மற்றும் 7-ந் தேதிகளில் ஆயிரத்து 30 பஸ்களும், மற்றும் 8-ந் தேதி கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 725 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 6 மற்றும் 7-ந்தேதிகளில் 192,3150 பஸ்களும், மாதாவரத்தில் இருந்து 6 மற்றும் 7-ந் தேதிகளில் 20 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
    • பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு பிரார்த்தனைகள், சிறப்பு ஆராதனைகள், திருப்பலி நடைபெறுகிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த விழாவில் பங்கேற்க வருவார்கள்.

    இதன் காரணமாக குறிப்பிட்ட நாட்களுக்கு சென்னை பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழாவில் பங்கேற்பதற்கு வசதியாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெசன்ட் நகருக்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 8-ந்தேதி விழா நிறைவடைகிறது. இதையொட்டி, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை வேளாங்கண்ணி ஆலய த்துக்கு வருகிற 8-ந்தேதி வரை கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    பெரம்பூர், எண்ணூர், தாம்பரம், திருவொற்றியூர், கோயம்பேடு உள்ளிட்ட பல இடங்களில் இருந்து தினமும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகள் நெரிசல் மிகுந்த நேரங்களில் இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த நாட்களில் முக்கிய பஸ் நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • இன்று மற்றும் நாளை மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் இன்று முகூர்த்த நாள், நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆகியவற்றை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கும் 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    திருச்சியிலிருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பஸ்களும் என கூடுதலாக இன்று மற்றும் நாளை மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    அதே போன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப செல்ல 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் சென்னை தடத்தில் 150 சிறப்பு பேருந்துகளும், பிறத்தடங்களிலும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் வேளாங்கண்ணி திருவிழாவிற்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகேற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 23-ந் தேதி முகூர்த்தம், 24-ந் தேதி சனிக்கிழமை, 25-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 26-ந் தேதியன்று கிருஷ்ண ஜெயந்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வருகிற 23, 24-ந் தேதி ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை மறுநாள் 23-ந் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 24-ந் தேதி (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் 485 பஸ்களும், மற்றும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 26ம் தேதி திங்கள் கிழமை கிருஷ்ண ஜெயந்தி அன்று கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 23-ந் தேதி மற்றும் 24-ந் தேதியன்று 70 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    மேலும், திங்கட்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கூடுதலாக 70 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க நடவடிக்கை.

    சென்னை:

    மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாம்பரம் ரெயில் நிலையத்தில் இன்றுமுதல் ஞாயிற்றுக்கிழமை வரை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அந்த நாள்களில் காலை 10.30 முதல் பிற்பகல் 2.30 மணி வரையும், இரவு 10 மணி முதல் 11.59 மணி வரையும் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் பல்லாவரம் ரெயில் நிலையம் வரையும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

     எனவே, அந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் சாா்பில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கூடுதலாக பல்லாவரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 30 பஸ்களும், பல்லாவரம் பஸ்நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பஸ்களும், தாம்பரம் பஸ்நிலையத்தில் இருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பஸ்களும் என மொத்தம் 70 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


    மேலும், தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் விதமாக, கூடுவாஞ்சேரி மாா்க்கத்தில் செல்லும் அனைத்து பஸ்களும் இந்து மிஷன் மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் வருகிற 18-ந் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் இருந்து இன்று வெளியூர் செல்வதற்கு 15 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.
    • பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக கூடுதலாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சுதந்திர தினத்தையொட்டி நாளை அரசு விடுமுறை என்பதால் வெளியூர் பயணம் அதிகரித்துள்ளது. மறுநாள் வெள்ளிக்கிழமை ஒருநாள் அலுவலகங்களுக்கு விடுப்பு போடும் பட்சத்தில் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணம் செல்ல ஏற்கனவே திட்டமிட்டு பஸ், ரெயில்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்கள், சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பி விட்டன. அரசு விரைவு பஸ்களிலும் இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

    சென்னையில் இருந்து இன்று வெளியூர் செல்வதற்கு 15 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செல்ல 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து உள்ளனர்.

    வெளியூர் செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக இன்று கூடுதலாக 500 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி கூறுகையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் அதிகளவில் முன்பதிவு செய்து உள்ளார்கள்.

    18-ந்தேதி வெளியூர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு வருவதற்கு அதிகளவில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக கூடுதலாக பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்வது அவசியம். கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம் பஸ் நிலையங்களில் மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்க தயாராக உள்ளோம் என்றார்.

    இதே போல சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பஸ்களும் இன்று காலை நிலவரப்படி 70 சதவீதம் நிரம்பியுள்ளன. மாலையில் கூட்டம் அதிகரிக்கும்போது இடங்கள் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தொடா் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினம் மற்றும் தொடா் விடுமுறையை முன்னிட்டு நாளை (புதன் கிழமை) சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை- 470 பஸ்களும், வெள்ளி மற்றும் சனிக்கிழமை 365 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்க ளுக்கு நாளை 70 பஸ்களும், வெள்ளிக் கிழமை மற்றும் சனிக்கிழமை 65 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து புதன், வெள்ளி மற்றும் சனிக்கி ழமை ஆகிய நாள்களில் 20 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1190 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    மேலும், வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூா் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 585 பஸ்களும் இயக்கப் பட உள்ளன.
    • நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 260 பஸ்களும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) 585 பஸ்களும் இயக்கப் பட உள்ளன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 45 பஸ்கள் என 90 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    மேலும், பெங்களூா், திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    இதுமட்டுமன்றி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை, படுக்கை மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட 50 பஸ்கள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை, மதுரை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூா், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு பஸ்களில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    மேலும், வார இறுதி நாள்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 15 பஸ்களும், நாளை மறுநாள் பவுா்ணமி தினத்தை முன்னிட்டு 15 பஸ்களும் என 30 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    பவுர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மறுநாள் 30 சிறப்பு பஸ்கள் என ஆக மொத்தம் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
    • ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    வார இறுதி நாளான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை-புறநகர் பகுதியில் இருந்து வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கி வருகின்றன.

    வார விடுமுறை தினங்களான நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 265 பஸ்கள், (சனிக்கிழமை) 325 பஸ்கள் இயக்கப்படும்.

    இதுபோல, கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 65 பஸ்கள், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 கூடுதல் பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தலா 15 என மொத்தம் 945 பஸ்கள் இயக்கப்படும்.

    இதுதவிர ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்தார்.

    ×